அமர்சிங்
தஞ்சாவூர் மராத்திய அரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமர்சிங் அல்லது ராமசாமி அமர்சிங் போன்சலே (Amar Singh or Ramaswami Amarasimha Bhonsle) (மராத்தி: रामस्वामी अमरसिंह भोसले) என்பவர் தஞ்சாவூர் மராத்திய அரசர் பிரதாபசிம்மனின் இளைய மகனாவார். இவர் தஞ்சாவூர் மராத்திய மன்னரான துளஜாஜியின் வளர்ப்பு மகனும், அவருக்கு அடுத்து சிறுவயதில் பட்டத்துக்கு வந்த இரண்டாம் சரபோஜியின் அரசப் பிரதிநிதியாக இருந்து 1787 முதல் 1793 வரை ஆண்டவர் ஆவார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
விவரங்கள்
தஞ்சாவூர் அரசரின் வளர்ப்பு மகனான இரண்டாம் சரபோஜி பாலகனாக இருந்த காரணத்தினால், இவர் அரசப் பிரதிநிதியாக இருந்து 1793 முதல் 1798 வரை அமர்சிங் ஆட்சி செய்தார். அமர்சிங் மிக தாராள மனம் கொண்டவராக இருந்தார். கற்றவர்களுக்கு நிறைய அளவில் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. தன் அண்ணனின் வளர்ப்பு மகனுக்கு தன்னிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் 1798 சூன் 29 அன்று ஒப்படைத்ததை தீவிரமாக எதிர்த்தார். தெலுங்கு மற்றும் சமஸ்கிருத நாடகங்களில் இவர் ஆர்வம் காட்டினார். மத்ருபூதன என்பவர் இவரது அவையில் புகழ்பெற்ற ஒரு கவிஞராக இருந்தார், அவர் உருவாக்கிய பாரிஜாதபவனம் இசையமைப்புக்கு குச்சுப்புடி நடணம் ஆடப்பட்டது.
Remove ads
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads