அமிர்தவர்ஷிணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமிர்தவர்ஷிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2][3]
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ க3 ம2 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம2 க3 ஸ |
- இது ஒரு ஔடவ இராகம்.
- ரிஷபம், தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
- அமிர்தவர்ஷிணி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
திரையிசைப் பாடல்கள்
இந்த இராகத்தில் அமைக்கப்பட்ட திரை இசைப் பாடல்:
- "தூங்காத விழிகள் இரண்டு" - அக்னி நட்சத்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads