அயூத்தியா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயூத்தியா இராச்சியம் (Ayudhya) அல்லது அயூத்தயா (Ayutthaya Kingdom, தாய்: อาณาจักรอยุธยา), என்பது கிபி 1351 முதல் 1767 வரை ஆட்சியில் இருந்த சயாமிய இராச்சியத்தைக் குறிக்கும். இதன் தலைநகர் அயூத்தியா ஆகும். [1]
இவ்விராச்சிய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு வணிகர்களுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தனர். சீனர், இந்தியர், சப்பானியர், பாரசிகர் முதல் ஐரோப்பியர்கள் வரை தலைநகருக்கு வெளியே கிராமங்களை அமைக்க அனுமதிக்கப்பட்டனர். 16ம் நூற்றாண்டில் இவ்விராச்சியம் கிழக்குப் பகுதியிலேயே ஒரு பெரும், வளமிக்க நாடாக வெளிநாட்டு வணிகர்களால் கணிக்கப்பட்டது. மன்னர் நராய் (1656–88) பிரான்சின் பதினான்காம் லூயியுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தான்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads