அழகசுந்தரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அழகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட பிரான்சிஸ் கிங்ஸ்பரி[1] (Francis Kingsbury, 1873 - 1941) யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் புதல்வர்.[2][3] பின்னாளில் கிறித்தவ மதத்தைத் தழுவிய இவர் ஞானஸ்நானத்தின் போது பிரான்சிஸ் கிங்ஸ்பரி எனும் பெயரை ஏற்றுப் பாதிரியாராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார்.

விரைவான உண்மைகள் பிரான்சிஸ் கிங்ஸ்பரிFrancis Kingsbury, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சென்னைக்கு சில மைல் தொலைவில் உள்ள தண்டையார்பேட்டை என்னும் புறநகரில் வசித்து வந்தவர் சி. வை. தாமோதரம்பிள்ளை. இவருக்கும் இவரது இரண்டாவது மனைவி நாகமுத்து என்பவருக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தவரே அழகசுந்தரம். இவர் பிறந்தது 1873 ஆவணி 8-ஆம் நாள்.[4]

இவர் கிறித்துவ மதத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் சைவ சமயத்தை மிகத் தீவிரமாக மதித்தார். தனது தந்தை தாமோதரனார் கிறித்துவம் தவிர்த்து சைவநெறி ஏற்றுக்கொண்டார். பிரான்சிசு கிறித்துவத்தைத் தவிர்க்கவில்லை, ஆனால் சைவ ஈடுபாட்டை மிகுதியாகக் கொண்டிருந்தார். ஈழத்து சிவாலயங்களுக்கு‌ திருப்பணி செய்து வந்தார், நாயன்மார்களின் வரலாற்றைப் பதிப்பித்தார்.‌ திருமுறைகளின் மேல் மிகுந்த மரியாதையும், பற்றும், ஈடுபாடும் கொண்ட இவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புத் திருப்பணிகளை செய்து வந்தார்.

Remove ads

இயற்றிய நூல்கள்

இவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.[5] அவற்றில் சில:

  • ஏசு வரலாறு
  • அகப்பொருட் குறள்
  • இராமன் கதை
  • பாண்டவர் கதை
  • சந்திரகாசம்
  • மனோன்மணி நாடகம் (1948, இலங்காபிமானி அச்சியந்திரசாலை, சாவகச்சேரி)
  • Hymns of the Tamil Saivite Saints (மறுபதிப்பு: Nabu Press, 2011)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads