ஆயுஷ் அமைச்சகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய அமைச்சராக சர்பானந்த சோனாவால் மற்றும் இராஜாங்க அமைச்சராக மகேந்திரா முஞ்ச்பரா உள்ளனர்.[1] இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி, சோவா-ரிக்பா மற்றும் யோகாசனம் ஆகிய கல்விகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் விளம்பரப்படுத்த இந்த அமைச்சகம் செயல்படுகிறது.
Remove ads
வரலாறு
1995ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ முறைகளுக்கான துறை நிறுவப்பட்டது. 9 நவம்பர் 2014 அன்று இந்திய மருத்துமுறைகளுக்கான துறை ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2]
நிறுவனங்கள்
இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[3]
- தேசிய ஓமியோபதி நிறுவனம்[4]
- தேசிய சித்தா நிறுவனம் [5]
- தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் [6]
- தேசிய ஆயுர்வேத நிறுவனம்
- தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம்
- மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்
- வடகிழக்கு தேசிய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனம்
- வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவம்
ஒழுங்குமுறை அமைப்புகள்
இந்த அமைச்சகம் கீழ் கண்ட ஒழுங்குமுறை அமைப்புகள் கொண்டுள்ளது.
- இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய ஆணையம்.[7]
- மத்திய ஓமியாபதி மன்றம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads