இந்திய நலக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய நலக் கட்சி (Welfare Party of India) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். iதன் முதல் தேசியத் தலைவர் முஜ்தபா ஃபரூக் ஆவார். மேலும் சையத் காசிம் ரசூல் இலியாசு, இலியாசு ஆசுமி, ஜாபருல் இசுலாம் கான், மௌலானா அப்துல் வகாப் கில்ஜி மற்றும் இலலிதா நாயக் ஆகியோர் முக்கியத் தலைவர்கள் ஆவர்.[1] இது இந்தியா முழுவதும் மாநில, மாவட்ட அளவிலான கிளைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
Remove ads
வரலாறு
இந்திய நலக் கட்சி உருவாக்கம் 2011ஆம் ஆண்டில் தில்லியில் சையத் காசிம் ரசூல் இலியாசு தலைமையில் நிறுவப்பட்டது.[2]
அறியப்பட்ட கிளைகள்
கேரள நலக் கட்சி என்பது இந்திய நலக் கட்சியின் கேரள பிரிவு ஆகும். இது அக்டோபர் 19, 2011 அன்று கோழிக்கோட்டில் உள்ள தாகூர் மண்டபத்தில் தொடங்கப்பட்டது.[3] இந்த அமைப்பு விரிவான நிலச் சீர்திருத்தத்திற்காக வாதிடுகிறது. கேரளாவின் நிலமற்ற மக்களால் பல போராட்டங்களும் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.[4][5] இது சகோதரத்துவ இயக்கம் என்ற மாணவர் பிரிவைக் கொண்டுள்ளது.[6]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads