இராசிபுரம்
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசிபுரம் (ஆங்கிலம்:Rasipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும். இது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் இரண்டாவது நகராட்சி ஆகும். 1948-இல் உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். இவ்வூரின் பெயர் ஸ்ரீ ராஜபுரம் எனப் பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக இங்கு அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன. ராசிபுரம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11.47°N 78.17°E ஆகும்.[1] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 246 மீட்டர் (807 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,370 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராசிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராசிபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2022 உள்ளாட்சி தேர்தல்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads