இரசுத்து

ஈரான் நகரம் From Wikipedia, the free encyclopedia

இரசுத்துmap
Remove ads

இராசுத்து(Rasht (Persian: رشت, romanized: Raŝt [ɾæʃt] (கேட்க); Gilaki: Rəsht; இதனைக் குறிக்கும், பிற ரோமானியா சொற்கள்: Resht ;Rast, பிரெஞ்சு மொழிச் சொல்லான, Recht என்ற சொல்லினைப் போலவும், பழைய இடாய்ச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள கையெழுத்துப் பிரதிகளில் உள்ள சொல்லைப் போலவும் எழுத்துகளில் எழுதப் படுகின்றன.[2] இந்த இராசுத்து நகரம் தான், ஈரான் நாட்டிலுள்ள முப்பத்தொன்று மாகாணங்களில் ஒன்றான, கீலான் மாகாணத்தின், தலைநகரம் ஆக உள்ளது. "மழையின்நகரம்" (شهر باران, Ŝahre Bārān) எனவும், இந்நகரம் அழைக்கப் படுகிறது. 2011 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 24ந்தேதி அறிவிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகையானது, 639,951 நபர்களைக் கொண்டிருந்தது.[3] இந்த நகரத்தில் மக்கள், மற்ற எந்த ஒரு ஈரான் நகரத்தினை விடவும் நெருக்கமாகவும், அடர்வாகவும் வசிக்கின்றனர். இரவு, பக்கல் எந்நேரத்திலும் இந்நகரத்தில் வாழும் மக்கள் இயங்கி வருவதைக் காணலாம். எனவே, இதனைத் தூங்கா நகரம் என்றும் அழைப்பர்.

விரைவான உண்மைகள் Raŝt Rəsht (Gilaki), Country ...

ஈரானின் காஸ்பியன் கடல் கடற்கரையில்,இராசித்து என்ற இந்த மிகப்பெரிய நகரம் அமைந்நுள்ளது. இதன் பந்தர்-இ அன்சாலி துறைமுகத்தைப் பயன்படுத்தி, காகேசியா, இரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையிலான, முக்கிய வர்த்தகமும், வாணிபமும் நடைபெறும் நடுப்பகுதியாக, இந்நகரம் திகழ்கிறது. இராசித்து, ஈரானின் முக்கிய சுற்றுலா செயற்களமாகவும் செயற்படுகிறது. இந்நகருக்கு, அருகிலுள்ள மலைகளில் உள்ளலின் உல்லாச விடுதி என்பதும், காஸ்பியனின் கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களாக இருக்கின்றன.

Remove ads

வரலாறு

வரலாற்று அடிப்படையில், இராசித்து ஈரானை நாட்டியும், இரசியா நாட்டையும், ஐரோப்பாவுடன் இணைக்கும் நகரமாக அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளின், முக்கிய போக்குவரத்துச் சாலைகளையும், வணிக நடுவமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக, இந்நகரமானது "ஐரோப்பாவின் நுழைவாயில்" என்று அழைக்கப்பட்டது. இந்த நகரம், 13 ஆம் நூற்றாண்டுக்களைக் குறித்த வரலாற்றைச் சொல்லும் நகரமாக உள்ளது. ஆனால், இதன் நவீன வரலாறு சஃபாவிட் காலத்திலிருந்து தான் தொடங்குகிறது. அக்காலக்கட்டத்தில், இந்த நகரமானது, ஏராளமான ஜவுளிப் பட்டறைகளைக் கொண்ட, மிகப்பெரிய பட்டு வர்த்தக நடுவமாக இருந்தது.

இந்தகரைப் பற்றிய முதற்குறிப்பு, கி. பி 682 ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களில் காணப்படுகிறது. அதன் பிறகு, பல நூற்றாண்டுகள் இந்நகரம் அமைதியான வளர்ச்சிப் பாதையில் கொழித்து வளர்ந்தது. 1669 ஆம் ஆண்டு கோசாக் போர்வீரரான, ஸ்டென்கா ராசின் என்பவன் இந்நகரத்தின் வளத்தைச் சூறையாடினான். 1714 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தால், இந்த நகரம் பெருமளவு அழிந்தது. 1722–1732 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த உருசீய-பாரசீகப் போர் காரணமாக, இரசிய வல்லாதிக்கத்தினர், இந்த நகரத்தினைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்தார்கள். 1901 ஆம் ஆண்டு இந்நகரின் மக்கள், தொற்றுநோய் தாக்கியதால், பெரும் பேரழிவிற்கு, இந்நகரம் உட்பட்டது. 1917–1920 ஆம் ஆண்டு துறைமுக நகரமான பந்தர்-இ அன்சாலியும், இராசித்து நகரமும், உருசிய, ஆங்கிலேய ஆயுதப்படைகளுகுக இடையை போர் நிகழ்ந்தது. அதில் ஆங்கிலேயர்கள் பின்னடைவு அடைந்து, இரசியர்கள் மீண்டும், இப்பகுதியை ஆண்டனர். அதன்பிறகு, 1920–1921 ஆண்டுகளுக்கு இடையில், குறுகிய கால கிலன் சோவியத் சோசலிச குடியரசு, அதன் தலைநகரான இராசித்தில் நிறுவப்பட்டது. 1937 ஆம் ஆண்டு, "சாலை வரி" வசூலிக்க வேண்டும், இரசிய அரசின் விருப்பத்தால் ஏற்பட்ட, ஒரு உள்ளூர் கிளர்ச்சி அடக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு, இராசித்து நகரின் முதல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads