இரும்பை மாகாளேசுவரர் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

இரும்பை மாகாளேசுவரர் கோயில்
Remove ads

மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் (Irumbai Mahaleswarar Temple) தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற மகாகாளேசுவரர் கோயில், பெயர் ...
Thumb
திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்
Remove ads

அமைவிடம்

திருஅரசிலியிலிந்து சில கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் இரும்பை. இரும்பை மாகாளேஸ்வரர் கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்து அவற்றில் ஒன்று விழுந்துவிட்டதால் அந்த இடம் வழித்தெடுத்தாற் போலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு

மகாகாளர், கடுவெளிச் சித்தர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[2]

சம்பந்தர் பாடல்

இத் தலம் குறித்து சம்பந்தர் பாடிய பாடல்:

பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண்மதி
ஈசன் எங்கள் இறைவன் னிடம்போய் இருப்பைதனுள்
மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே. -சம்பந்தர்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads