இளஞ்சேரல் இரும்பொறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான[1] குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புகள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.
இளஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.
Remove ads
இவனைக் குறிக்கும் தொடர்கள்
என்றெல்லாம் இவன் குறிப்பிடப்படுகிறான்.
புலவர்க்குக் கவரி வீசியது
- அரசனின் முரசை நீராட்டிவர எடுத்துச் சென்றிருந்தபோது, அரசனைக் காணவந்த புலவர் மோசி கீரனார் முரசு வைக்கும் பெருமைக்குரிய கட்டிலில் அது முரசுக்கட்டில் என்று தெரியாமல் அதன்மீது படுத்து உறங்கிவிட்டார். அக்கால வழக்கப்படி இது தண்டனைக்குரிய குற்றம். அரசன் முரசுடன் மீண்டபோது புலவர் நிலையைக் கண்டார். புலவரை அவன் தண்டித்திருக்க வேண்டும். மாறாக, உறக்கம் கலைந்து புலவர் எழும் வரையில், அரசன் புலவருக்குக் கவரி வீசிக்கொண்டிருந்தான். அந்த அளவுக்கு இவன் புலவர்களை மதித்தான்.[9]
Remove ads
ஆட்சி
- தகடூரைக் கைப்பற்றினான் பெயர் தரும் செய்தி
- கொல்லி மலையை நீண்ட நாள் முற்றுகையிட்டிருந்தான்.[10]
- தேர்ப்படையுடன் சென்று பகைவரைத் தாக்கினான் [11]
- இவனோடு போரிட்ட பெரும்பூண் சென்னி போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிய குடைகள் கபிலர் இவனது தந்தையைப் பாடி, பதிற்றுப்பத்து ஏழாம் பத்து பரிசாகப் பெற்ற ஊர்களைக் காட்டிலும் அதிகம்.[12][13]
கொடை
- பாடினிக்கு நல்ல அணிகலன்கள் பதிற்றுப்பத்து 87
- பேரியாறு ஒழுகுவது பொல் கொடை வழங்குவான். பதிற்றுப்பத்து 88
முன்னோர் பதிற்றுப்பத்து 88
- கடவுள் பெயரிய கானத்தில கல் உயர்த்தியவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியம் காட்டில் கொற்றவையை வழிபட்டு வருடை ஆடுகளைக் கவர்ந்து வந்தவன்
- குட்டம் தொலைய வேலிட்டவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
- காவல் மரம் கடம்பை வெட்டியவன். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
- கழுவுள் அரசனை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை
- அண்டர் ஓட்டியவன். பெருஞ்சேரல் இரும்பொறை
- வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட நன்னன் அரசனைத் தேய்த்தவன். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
- அயிரை தெய்வத்தை வழிபட்டவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்
- வேந்தரும் வேளிரும் பணிய நாடாண்டவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
ஆகியோரின் மருகன் (மரபு வழியில் வந்தவன்) இவன்.
Remove ads
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads