தருமபுரி
தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தருமபுரி அல்லது தர்மபுரி (ஆங்கிலம்: Dharmapuri) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இதுவே தருமபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.
இது சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து, பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாகச் செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ.. தொலைவில் ஒகேனக்கல் அருவி உள்ளது. இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்கள் உள்ளன.
Remove ads
சொற்பிறப்பு
தருமபுரி ஆனது சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தகடூர் என்ற பெயர், இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது, "தகடு" அதாவது இரும்பு (இரும்பு தாது) என்று பொருள் மற்றும் "ஊர்" அதாவது "இடம்" என்று பொருள்படும். தகடூர் என்ற பெயர் சங்க காலத்திற்குப் பிறகு தருமபுரி என மாற்றப்பட்டது, இது விஜயநகரப் பேரரசு காலத்திலோ அல்லது மைசூர் அரசு காலத்திலோ இருக்கலாம்.
வரலாறு
சங்ககாலத்தில் அதியமான் என்னும் அரசன் தகடூரை ஆண்டு வந்தார். தகடூர் யாத்திரை என்னும் நூல் அவன்மீதோ, அவனது முன்னோன் [1] மீதோ பாடப்பட்ட நூலாகும். சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்.
இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடர் பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), திப்பு சுல்தான் இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவான, மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று தருமபுரி மாவட்டம் நிறுவப்படும் வரை, இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
தருமபுரி நகராட்சி வரலாறு
1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5 ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ஆம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும், டிசம்பர் 02, 2008 ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், மார்ச் 6, 2019 அன்று சிறப்பு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 68,619 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.5%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.99%, முஸ்லிம்கள் 9.65%, கிறிஸ்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[2]
Remove ads
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
தருமபுரி நகராட்சியானது தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த செ. செந்தில்குமார் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை பாமகவை சேர்ந்த எஸ். பி. வெங்கடேஸ்வரன் வென்றார்.
Remove ads
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
தருமபுரி ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 உடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது வடக்கு-தெற்கு பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகரிலிருந்து தோன்றி இந்நகரின் வழியாக சென்று, கன்னியாகுமரியில் முடிகிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையானது தருமபுரி வழியாக செல்கிறது.
தொடருந்துப் போக்குவரத்து
தருமபுரியில் ஒரு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையமானது, பெங்களூரு - சேலம் பாதையை இணைக்கிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் இரயில் பாதையானது, தருமபுரி வழியாக செல்கிறது. அதேசமயம் 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தருமபுரி - மொராபூர் என்ற மற்றொரு பாதை, இந்திய அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவை காரணமாக மின்மயமாக்கலுடன் இந்த பாதை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்த புதிய பாதை தருமபுரி மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு, மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை பெங்களூர் - சென்னை செல்வதற்கான மாற்று பாதையாகவும் (தருமபுரி வழியாக) இருக்கும்.
வானூர்தி போக்குவரத்து
இங்கிருந்து 47 கி.மீ. தொலைவில் கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள சேலம் வானூர்தி நிலையமும் மற்றும் 162 கி.மீ.. தொலைவில் பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமும் அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.
Remove ads
வானிலை மற்றும் காலநிலை
தருமபுரியில் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை உள்ளது (கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென்). மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களின் கோடை காலங்களில் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 38 °C அல்லது 100.4 °F வரை அடையும். டிசம்பரில் வெப்பநிலை குறைகிறது மற்றும் குறைந்த வெப்பநிலை பிப்ரவரி வரை தொடர்கிறது, சனவரி மாதத்தில் குறைந்தபட்சம் 14 °C அல்லது 57.2 °F ஐத் தொடும். மாவட்டத்தில் சராசரியாக 910 மில்லிமீட்டர் அல்லது 35.83 அங்குல மழை பெய்யும். இங்குள்ள வெப்பமண்டல காடுகளில் பொதுவாக குறுகிய புதர்கள் மற்றும் முள் செடிகள் உள்ளன.
Remove ads
சுற்றுலாத் தலங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads