இ-03 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொழும்பு - கட்டுநாயக்கா - நீர்கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை (Colombo - Katunayake - Negombo Expressway, E03) என்பது இலங்கையின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலை (E வகை) ஆகும்.[1] 25.8 கி.மீ. (16 மைல்) நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரையும், கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்,[2] நீர்கொழும்பு நகரம் ஆகியவற்றையும் இணைக்கிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2009 அக்டோபரில் ஆரம்பமாயின. 2013 அக்டோபர் 27 இல் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.[3]
இந்நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து பேலியகொடை வரை இரு திசைகளிலும் மூன்று வழித்தடங்களும், பேலியகொடை முதல் கட்டுநாயக்கா வரை இரு வழித்தடங்களும் 226 முதல் 33.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.[4]
இத்திட்டத்தின் முழுச்செலவும் $292 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் 248.2 மில். டாலர்களை சீனாவின் எக்சிம் வங்கி கடனாக வழங்கியுள்ளது. இலங்கை அரசு 45 மில். டாலர்களைச் செலவழித்துள்ளது.[5]
இந்நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் முதல் 8 கி.மீ.களுக்கு அதிகூடியது 80 கி.மீ./மணி வேகத்திலும், மீதமான தூரத்தை 100 கி.மீ./மணி வேகத்திலும் செல்லலாம்.[1] இந்த அதிவேக நெடுஞ்சாலையின் வழியே 42 பாலங்களும், 88 மதகுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உணுப்பிட்டியில் 480 மீட்டர் நீளப் பாலமும், கட்டுநாயக்காவில் 800 மீட்டர் நீளப் பாலமும் உள்ளடங்குகின்றன.[6]
கொழும்பில் இருந்து கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு செல்வதற்கு இந்நெடுஞ்சாலை வழியே செல்லுவதற்கு ஆகக்கூடியது 15 நிமிடங்களும், நீர்கொழும்பு செல்வதற்கு 20 நிமிடங்களும் எடுக்கிறது. இலங்கைப் போக்குவரத்து சபை சொகுசு பயணிகள் பேருந்து சேவையை இச்சாலை வழியே நடத்துகிறது.
Remove ads
வாயில்கள்
- கட்டுநாயக்கா வாயில்[1]
- ஜா-எலை வாயில்
- கெரவலப்பிட்டி வாயில் (திறக்கப்படவில்லை) (இது E02 அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கிறது)
- பேலியகொடை வாயில்
- புதிய களனிப் பால வாயில்
கட்டணம்
புதிய களனிப் பால வாயிலில் இருந்து பேலியகொடை வரை கட்டணம் இல்லை. பேலியகொடையில் இருந்து கட்டணம் அறவிடப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads