ஊர்காவற்றுறைக் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

ஊர்காவற்றுறைக் கோட்டை
Remove ads

ஊர்காவற்றுறைக் கோட்டை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த வேலணைத்தீவு என்னும் தீவின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஊர்காவற்றுறையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் ஒன்றே வேலணைத்தீவு. கோட்டை தீவின் வடக்கு முனையை அண்டிய கரையோரத்தில், பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை அண்டிய நீரேரிக்குள் நுழையும் ஒடுங்கிய கடற் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் உள்ளது. சில இடிபாடுகளே எஞ்சியுள்ளன[1]. இக்கோட்டை முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்ட போது ஊர்காவற்றுறைக் கோட்டையும் ஒல்லாந்தர் வசமானது.

விரைவான உண்மைகள் ஊர்காவற்றுறைக் கோட்டை, வகை ...
Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads