எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா

From Wikipedia, the free encyclopedia

எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா
Remove ads

எம். கே. ஏ .டி. எஸ். குணவர்தனா (M. K. A. D. S. Gunawardana, மார்ச்சு 6, 1947 - 19 சனவரி 2016), இலங்கை அரசியல்வாதி ஆவார். நீண்ட காலம் இலங்கை சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.[1] இவர் மூன்று தடவைகள் திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகிந்த ராசபக்ச அரசில் பிரதி அமைச்சராக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டில் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முகமாக ராசபக்சவின் அரசில் இருந்து விலகினார். 2015 பொதுத் தேர்தலில் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்.[2] ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு காணி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனாM. K. A. D. S. Gunawardanaநா.உ., காணி அமைச்சர் ...

கம்பகாவில் வசித்து வந்த இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், ஒரு பண்ணை உரிமையாளர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads