எழுத்து (இலக்கணம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

  • முதலெழுத்து, சார்பெழுத்து என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
  • உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாகுபாடு. மெய் தனித்து இயங்காது.
  • குறில், நெடில் என்பன எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
  • வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.
  • சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துகள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
  • மயங்கும் எழுத்துகள், மயங்கா எழுத்துகள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துகளையும், ஒலிக்கமுடியாத எழுத்துகளையும் குறிப்பன.
  • மொழிமுதல் எழுத்துகள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை
  • மொழியிறுதி எழுத்துகள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.
  • புணர்ச்சியில் மயங்கும் எழுத்துகள்[1][2][3]
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads