ஏர்வாடி (இராமநாதபுரம்)
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏர்வாடி (ஆங்கிலம்:Erwadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமகுடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[1][2][3]
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[4][5]
இவ்வூரில்தான் பிரசித்தி பெற்ற, மகான் சுல்தான் செய்யது இபுராகிம் பாதுசா நாயகம் அடங்கியுள்ள ஏர்வாடி தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவானது இந்துக்கள் மற்றும் இசுலாமியர்களால் இணைந்து நடத்தப்படும் சமூக மத நல்லிணக்க விழாவாகும்.
Remove ads
அமைவிடம்
கீழக்கரை நகரில் இருந்து மேற்காக அன்னளவாக 10 கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 25 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
நிர்வாக அலகு
- மாவட்டம்: இராமநாதபுரம்
- வருவாய் கோட்டம்: பரமகுடி
- வட்டம்: கீழக்கரை
- வருவாய் கிராமம்: ஏர்வாடி
- ஊராட்சி ஒன்றியம்: கடலாடி
- ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து): ஏர்வாடி
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads