ஐ.என்.எஸ். காமோர்த்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐ.என்.எஸ். காமோர்த்தா என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலாகும். ஐ.என்.எஸ். காமோர்த்தா புதிய போர்க்கப்பலை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் ஆகஸ்ட் 23, 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியக் கப்பல் படைக்கு அர்பணித்தார்.
Remove ads
கப்பலின் சிறப்புகள்
3500 டன் எடை கொண்ட ஐ. என். எஸ். காமோர்த்தா போர்க்கப்பல் 110 மீட்டர் நீளத்துடனும், 14 மீட்டர் அகலத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இது நீரில் மிதந்து செல்வது மட்டுமின்றி, நீர் மூழ்கிக் கப்பல்களையும் கண்டறிந்து நீரில் மூழ்கித் தாக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கப்பலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக இந்தியாவிலேயே கட்டப்பட்டது. இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்ககுனரகம் உருவாக்கியுள்ளது. நான்கு 5096 குதிரைத் திறன் கொண்ட டீசல் என்ஜின்களை கொண்டு இயக்கப்படுகிறது. இதன் அதிகப்பட்ச வேகம் 25 கடல் மைல் (மணிக்கு 59 கி.மீ) ஆகும். இந்தக் கப்பலில் ஹெலிகாப்டரை இயக்கும் அணியை தவிர 180 கடல் மாலுமிகளும், 15 உயர் அதிகாரிகளும் பயணம் செய்யமுடியும். இந்தக் கப்பலில் 200 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை கண்டறியும் வகையில் அதிநவீன ரேவதி கண்காணிப்பு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த தொலைவுக்குச் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் ஆற்றல், இந்தப் போர்க்கப்பலுக்கு உண்டு. ஹெலிகாப்டரையும் சுமந்து செல்லும் வசதி உள்ளது. [3] [4]. [5]
Remove ads
பெயர்காரணம்
நிகோபார் தீவுகளில் உள்ள காமோர்த்தா என்ற தீவின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
- ஐ. என். எசு. அரிகந்த்
- ஐ.என்.எஸ். சுனைனா
- ஐ.என்.எஸ். தரங்கிணி
- ஐ.என்.எஸ்.சக்ரா
- ஐஎன்எஸ் கொச்சி
- ஐஎன்எஸ் சக்ரா 2
- ஐஎன்எஸ் சரயு (பி57)
- ஐஎன்எஸ் சென்னை
- ஐஎன்எஸ் ரன்வீர் (டி54)
- ஐஎன்எஸ் ராணா (டி52)
- ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் (எஸ்59)
- எச். எம். எஸ் பஞ்சாபி
- ராஜபுதன வகுப்பு அழிகலன்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads