ஓம் பர்வதம்

From Wikipedia, the free encyclopedia

ஓம் பர்வதம்
Remove ads

ஓம் பர்வதம் (Om Parvat) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்திய-நேபாள எல்லையில் அமைந்த பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் இமயமலையில் அமைந்துள்ளது. இதனருகில் ஆதி கைலாசம் உள்ளது.

விரைவான உண்மைகள் ஓம் பர்வதம், உயர்ந்த புள்ளி ...

இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ஓம் பர்வதம் இந்தியப் பகுதில் "ஓம்" வடிவம் தெரியுமாறும், நேபாளத்தில் மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரில் 6191 மீ உயரத்தில் அமைந்துள்ள மலையாக ஓம் பர்வதம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு லிட்டில் கைலாஷ், ஆதி கைலாஷ், பாபா கைலாஷ் மற்றும் ஜோங்லிங்கோங் சிகரம் என்ற பெயர்களும் உண்டு. 'ஓம்' (OM) அல்லது 'அம்' (AUM) என்ற வடிவத்தில் பனி படர்ந்திருக்கும் இந்த மலை இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

Remove ads

புனித நிலை

இம்மலையிலுள்ள பனிப்படிவு வடிவம் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ஓம் (ॐ) என்ற வடிவத்தை ஒத்திருக்கிறது. அதன் தோற்றம் திபெத்தில் உள்ள கயிலை மலையை ஒத்திருக்கிறது.[1] ஓம் பர்வத்தின் அருகில் இந்துக்களுக்குப் புனிதமான பார்வதி ஏரி மற்றும் ஜோலிங்க்கோங் ஏரிகள் அமைந்துள்ளன.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads