கண்மணி (இயக்குநர்)

இந்திய திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்மணி என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ் படங்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, கண்மணி தெலுங்கு படங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.

விரைவான உண்மைகள் கண்மணி, பிறப்பு ...

தொழில்

கண்மணி சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார், இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அவரிடம் குழுபாடகராகவும் பணியாற்றினார். அதன் பிறகு இவர் ஜெமினி (2002) படத் தயாரிப்பின் போது இயக்குநர் சரனின் கீழ் பயிற்சி பெற்றார். குறைந்த செலவில் எடுக்கபட்டபட்ட காதல் நகைச்சுவை திரைப்படமான ஆஹா எத்தனை அழகு (2003) படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இதில் மிதுன் தேஜஸ்வி, சார்மி கவுர் ஆகியோர் நடித்தனர். பின்னர் தெலுங்கில் நா ஓபிரி (2005), சின்னோடு (2006) ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். பின்னர் சமூக நாடகத் திரைப்படமான கால் சென்டர் (2008) மற்றும் காதல் நகைச்சுவை திரைப்படமான ஓடிபோலாமா (2009) ஆகியவற்றை இயக்கினார்.[2]

2015 ஆம் ஆண்டில் இவர் தெலுங்குத் திரைப்படமான பீருவாவை உருவாக்கினார். பின்னர் தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்ற திகில் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கினார். [3][4]

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads