கதாசரிதசாகரம்
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமசுகிருதத்தில் எழுதப்பட்ட தொன்மக் கதைகள் அடங்கிய நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதாசரிதசாகரம் (ஆங்கிலம்: Kathasaritsagara) (கதைகளின் கடல்) என்பது 11-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய புராணக்கதைகளில் சொல்லப்பட்ட விசித்திரக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். பொ.ச. 11-ஆம் நூற்றாண்டில் காஷ்மீரைச் சேர்ந்த சமசுகிருத எழுத்தாளரும், காஷ்மீர சைவ சமயத்தைச் சேர்ந்தவருமான சோமதேவர் என்பவரால் சமசுகிருதத்தில் மீண்டும் சொல்லப்பட்ட கதைகளாகும்.
கதாசரிதசாகரம் என்பது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த குணாதித்தியர் என்பவர் பைசாசம் மொழியில் எழுதிய பிரகத்கதையைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பைசாசம் என்ற அதிகம் கவனிக்கப்படாத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி இப்போது இதில் இல்லை. ஆனால் பல பிற்கால தழுவல்கள் இன்னும் உள்ளன - கதாசரிதசாகரம், பிருகத்கதாமஞ்சரி மற்றும் பகத்காதலோகாசம்கிரகா போன்றவை. இருப்பினும், இந்த மறுபதிப்புகள் எதுவும் நேரடியாக குணாதித்தரிடமிருந்து பெறப்படவில்லை. மேலும் ஒவ்வொன்றும் இடைநிலை பதிப்புகளைக் கொண்டிருக்கலாம். இப்போது நீண்ட காலமாக இழந்த பிருகத்கதாவை சமஸ்கிருதத்தில் எழுதவில்லை என்றாலும் அறிஞர்கள் குன்யாகாவை வியாசர் மற்றும் வால்மீகியுடன் ஒப்பிடுகிறார்கள். தற்போது அதன் இரண்டு சமசுகிருத மறுபதிப்புகள் உள்ளன. சேமேந்திராவின் பிருகத்கதாமஞ்சரி மற்றும் சோமதேவரின் கதாசரிதசாகரம் ஆகியவை.
Remove ads
உள்ளடக்கம்
இந்த படைப்பு 18 புத்தகங்களில் 124 அத்தியாயங்களை கொண்டுள்ளது. மற்ற உரைநடை பிரிவுகளில் கூடுதலாக சுமார் 22,000 வசனங்களைக் கொண்டுள்ளது.[1] வசனங்கள் ஒவ்வொன்றும் 16 எழுத்துகளில் 2 அரை வசனங்களைக் கொண்டுள்ளது. ஆக, எழுத்துப்பூர்வமாக, கதாசரிதசாகரத்தில் சுமார் 66,000 வரிகளுக்கு அயம்பிக் பென்டாமீட்டருக்கு சமம்; ஒப்பிடுகையில், ஜான் மில்டனின் பாரடைஸ் லாஸ்ட் என்பதின் 10,565 வரிகளின் எடையைக் கொண்டுள்ளது. இழந்த அசல் பிருகத்கதாவின் (மறைமுகமாக புராணக்கதை) 700,000 வசனங்களுடன் ஒப்பிடுகையில் இவை அனைத்தும் உள்ளன. புகழ்பெற்ற மன்னர் உதயனனின் மகன் நரவாகநதத்தாவின் சாகசங்களின் கதைதான் இதில் முதன்மைக் கதை ஆகும். இந்த மையக் கதையைச் சுற்றி ஏராளமான கதைகள் கட்டப்பட்டுள்ளன. இது தற்போதுள்ள இந்தியக் கதைகளின் மிகப்பெரிய தொகுப்பாகும். இதன் பத்தாவது புத்தகமான பஞ்சதந்திரக் கதைகள் மற்றும் பன்னிரெண்டாவது புத்தகமான வெதலாபஞ்சவிம்சதி அல்லது பைதால் பைசாசி என்பதன் மறுப்பதிப்புகளும் உள்ளது.
கதாசரிதசாகரம் பொதுவாக இழந்த பைசாசி பேச்சுவழக்கில் எழுதப்பட்ட குணாத்தியரின் எழுதிய பிரகத்கதை என்பதிலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் சோமதேவரின் கதாசாகரம் நூல், பைசாசம் உரையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். ஏனெனில் குணாத்யாவின் படைப்புகளில் குறைந்தது 5 வெளிப்படையான வழித்தோன்றல்கள் உள்ளது - பஞ்சதந்திர கதைகளைப் போலவே, கதாசரிதசாகர்த்தின் கதைகள் (அல்லது அதனுடன் தொடர்புடைய பதிப்புகள்) உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்தன.
Remove ads
செல்வாக்கு
இந்த புத்தகம் பௌத்த மத அறிஞர் ஹெர்பர்ட் வி. குந்தருக்கு மிகவும் பிடித்தது என்று அறிஞர் ஜோடி ரெனீ லாங், என்பவர் கூறியுள்ளார்.[2]
கதைகளின் கடல் பற்றிய தாக்கம் சல்மான் ருஷ்டியின் 'ஹாரூன்' மற்றும் 'கதைகளின் கடல்' ஆகியவற்றிற்கு ஒரு உத்வேகம் அளித்தது.[3]
Remove ads
இதனையும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads