கந்தகார் படுகொலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தகார் படுகொலை என்பது ஆப்கானித்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்ச்சு 11, 2012 அன்று விடியற்காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வை குறிக்கிறது. இப்படுகொலையில் பதினாறு குடிமக்கள் (ஒன்பது சிறார்களும் நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்) கொல்லப்பட்டனர். சில உடல்கள் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொறு உறுப்பினர்கள் அடங்குவர்.
இப்படுகொலையை செய்ததாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த செர்ஜியன்ட்[3] ஒருவர் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டார். அவ்வீரர் குவைத்திற்கு மார்ச்சு 13, 2012 அன்று கொண்டு செல்லப்பட்டு பின்னர் கான்சாசில் உள்ள இராணுவ தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.. மார்ச்சு 16,2012 அன்று அவரது பெயர் அடையாளம் காணப்பட்டது[4].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads