கரியாபந்து

From Wikipedia, the free encyclopedia

கரியாபந்துmap
Remove ads

கரியாபந்து (Gariaband), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் மத்திய கிழக்கில், ஒடிசா எல்லையை ஒட்டிய கரியாப்ந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். பைரி ஆற்றின் கரையில் அமைந்த கரியாபந்து நகரத்தில் கிபி ஆறாம் நூற்றாண்டின், விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பூதேஸ்வர் நாத் கோயில் உள்ளது.

Thumb
கரியாபந்து விஷ்ணு கோயில்கள், காலம், கிபி 6-7-ஆம் நூற்றாண்டு
விரைவான உண்மைகள் கரியாபந்து, நாடு ...
Remove ads

அமைவிடம்

மகாசமுந்து நகரத்திற்கு தெற்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் கரியாபந்து உள்ளது.

பெயர்க் காரணம்

கரியாபந்து எனில் மலைகளால் சூழப்பட்ட நிலப்பரப்பு எனப்பொருளாகும்.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 15 வார்டுகளும் 2,448 வீடுகளும் கொண்ட கரியாப்ந்து பேரூராட்சியின் மக்கள் தொகை 10,517 ஆகும். அதில் 5,233 ஆண்கள் மற்றும் 5,233 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1010 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.32% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.49% ஆகவுள்ளது.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.11%, இசுலாமியர் 9.74%, பௌத்தர்கள் 0.38%, சமணர்கள் 0.32%, சீக்கியர்கள் 0.27%, கிறித்தவர்கள் 0.87% மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads