கல்பகம் சுவாமிநாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கல்பகம் சுவாமிநாதன் (ஆகத்து 15, 1922 - ஏப்ரல் 6, 2011) தமிழ்நாட்டின் பிரபல வீணை இசைக்கலைஞரும் கருநாடக இசைப் பேராசிரியையும் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் கல்பகம் சுவாமிநாதன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், சேதலப்பதி கிராமத்தில் பிறந்தவர் கல்பகம். தனது எட்டாவது அகவையில் தாயார் அபயாம்பாளிடம் கருநாடக இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர்[2], டி.எல். வெங்கடராம ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சார் ஆகியோரிடம் முறையாகக் கருநாடக இசையைப் பயின்றார்.

கல்பகம் சுவாமிநாதனை ஆசிரியத் தொழிலுக்குக் கொண்டு வந்தவர் டைகர் வரதாச்சாரியார். கலாசேத்திராவில் 1940கள், 1950களில் வீணை கற்பித்தார். 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்து 1980 இல் பேராசிரியையாக இளைப்பாறினார்.

Remove ads

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads