முசிரி சுப்பிரமணிய ஐயர்
தமிழக பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முசிரி சுப்பிரமணிய ஐயர் (Musiri Subramania Iyer; ஏப்ரல் 9, 1899 – மார்ச் 25, 1975) ஒரு கர்நாடக இசைப் பாடகர். இவர் மேடை நிகழ்ச்சிகளை 1920 முதல் 1940 வரை செய்தார். இசைக் கச்சேரிகள் செய்வதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கர்நாடக இசை கற்பிக்கும் ஆசிரியராகவும், கர்நாடக இசை சமூகத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
இவர் 1899 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை சங்கரா சாஸ்திரி ஒரு சமற்கிருத வல்லுநர். தனக்கு 14 வயதாக இருக்கும் போது நாகலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.[1] இவர் தனது 17ஆவது வயதில் ஆங்கிலம் சரளமாகப் பேச, படிக்க, எழுதக் கற்றுக்கொண்டார்.
ஆரம்ப காலத்தில், இசைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு எஸ். நாராயணசுவாமி ஐயரிடம் கற்றார். பின் கரூர் சின்னசுவாமி ஐயர் மற்றும் டி. எஸ். சபேச ஐயர் ஆகியோரிடமிருந்து இருந்து இசை கற்று, 19 வயதில் தனது முதல் கச்சேரியில் பாடினார். முசிறி சுப்ரமணிய ஐயர் இந்நாட்டின் இருபதாம் நூற்றாண்டில் கர்நாடக இசை வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2]
Remove ads
இசைப் பணி
இவரின் மாணவர்கள்
- டி. கே. கோவிந்தராவ்
- மணி கிருஷ்ணஸ்வாமி
- பம்பாய் சகோதரிகள்
- சுகுணா புருசோத்தமன்
- சுகுணா வரதாச்சாரி
வகித்த பதவிகள்
- 1949-1965 சென்னை மத்திய கர்நாடக இசை கல்லூரி முதல்வர்
- ஸ்ரீ தியாகராஜர் பிரம்ம மகோத்வ சபா கவுரவ செயலாளர் மற்றும் பொருளாளர்
விருதுகள் மற்றும் பட்டங்கள்
- சங்கீத கலாநிதி விருது, 1939. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1957. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]
- இசைப்பேரறிஞர் விருது, 1963. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1966. வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- 1971இல் பத்ம பூஷன்
- 1999இல் அவரது பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads