கவரப்பட்டு சந்திர சேகரேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவரப்பட்டு சந்திர சேகரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.
Remove ads
அமைவிடம்
இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் கவரப்பட்டு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக சந்திர சேகரேசுவரர் உள்ளார். இறைவி காமாட்சியம்மன் ஆவார். [1]
அமைப்பு
அருணாசலேசுவரர், காசி விசுவநாதர், விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சிவன் கோயிலான இங்கு லட்சுமி நாராயணப்பெருமாளும், ஆஞ்சநேயரும் உள்ளனர். நவக்கிரகங்கள் தம்பதிசமேதராய் காட்சியளிக்கின்றனர். [1]
விழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. [1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads