காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதிக்கு அருகிலுள்ள காலடிபேட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[4][5][6] இக்கோயில் சுமார் 450 ஆண்டுகள் தொன்மையான பெருமை கொண்டது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மூலவர் பிரதி போல உருவாக்கப்பட்ட மூலவர் இக்கோயிலில் காட்சியளிக்கிறார்.[7]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13.1534°N 80.2966°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவி தாயார் ஆவர்.[8] மேலும், உற்சவர் பவளவண்ண பெருமாள் மற்றும் உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் ஆவர்.
கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி,[9] இராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதி[10] ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads