கிழக்கு கரை (திரைப்படம்)
பி. வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு கரை என்பது 1991 இல் வெளிவந்த இந்திய நாடகத்தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் பிரபு, குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மோகன் நடராஜன் மற்றும் வீ.சண்முகம் ஆகியோரால் தாயாரிக்கப்பட்டது. தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1991 செப்டம்பர் 20 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
Remove ads
கதைச் சுருக்கம்
முரளி (பிரபு) மற்றும் சேகர் (சந்திரசேகர்) ஆகியோர் நண்பர்கள். முரளி சேகருக்காக தனது வேலையை விட்டுக்கொடுக்கிறான். சேகருக்கு சுங்க அதிகாரியாக வேலை கிடைக்க முரளி தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அங்கு அவனது மாமாவின் மகள் விஜயலட்சுமி (குஷ்பு) அவனைக் காதலிக்கிறாள். முரளியின் தந்தை ரங்கநாதன் (விஜயகுமார்) பிரபல கடத்தல்காரனாக வேலை பார்க்கிறார். ஒருவழியாக தனது தந்தையின் வேலையைப்பற்றி முரளிக்கு தெரியவர வேலையை விட்டுவிடும்படி தனது தந்தையிடம் கேட்கிறான். தந்தையும் வேலையை விட்டுவிடுகிறார். இதற்குப் பழிவாங்க முரளியின் தந்தை கொல்லப்படுகிறார். அதன்பின்னர் முரளி பழிவாங்குவதுடன் கடத்தல் காரனாகவும் மாறுகிறான்.
Remove ads
நடிகர்கள்
- பிரபு -முரளி
- குஷ்பு -மகாலட்சுமி
- சந்திரசேகர் - சேகர்
- கவுண்டமணி - இராஜா (ஜாக்கி)
- விஜயகுமார் -ரங்கநாதன் (முரளியின் தந்தை)
- ஸ்ரீவித்யா -ஜானகி, முரளியின் தாய்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - இராஜாவின் தந்தை
- மோகன் நடராஜன்-குமார்
- ராக்கி-மைக்கேல்
- கே.ராஜ்பிரீத்-டாகா
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் -தங்குமிட முகாமையாளர்
- எல். ஐ. சி. நரசிம்மன்
- கிங் கொங்-பொறின் பல்லி
- உதய் பிரகாஷ்
- ஜீ.எம் சுந்தர்
- திலிப்
- வீர பாண்டியன்
- பெருமாள்
- இராதாகிருஷ்ணன்
- வரலட்சுமி-ராஜாவினுடைய தாய்
- பவிதா-மேரி
- சர்மிலி
- பேபி ஜெனிபர்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads