கிழக்கே வரும் பாட்டு
இராதா பாரதி இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கே வரும் பாட்டு (Kizhakke Varum Paattu) என்பது 1993 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் திரைப்படமாகும். இராதா பாரதி இயக்கிய இப்படத்தில் பிரசாந்த் மற்றும் சர்மிளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவா இசையமைத்தார்.[1] படம் வணிகரீதியாக ஒரு தோல்விப் படமாக ஆனது.
Remove ads
கதை
கதை தனது சொந்த ஊருக்கு வரும் மூர்த்தியைப் ( பிரசாந்த் ) பற்றியது. அவர் கிராமத்தில் ஊர் தலைவரின் மகள் கண்மணியை ( சார்மிலா ) சந்திக்கிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் காதல் கொள்கிறார்கள். சிறையில் இருந்து திரும்பும் கண்மணியின் அண்ணன் பொன்னம்பலம் அவர்களின் காதலையும், திருமணத்தையும் எதிர்க்கிறார். கதை மூர்த்தியின் தந்தையின் குறித்த முன் நடந்தை கதை நோக்கி செல்கிறது. அதைத் தொடர்ந்து, கதையில் பல அசம்பாவித சம்பவங்கள் திருப்பங்கள் தோன்றுகின்றன. மூர்த்தி எல்லா எதிர்ப்புகளையும் தாங்கி, கண்மணியின் கையைத் பிடிப்பதில் வெற்றி பெறுகிறார், படம் மகிழ்ச்சியோடு முடிகிறது.
Remove ads
நடிகர்கள்
- பிரசாந்த் மூர்த்தியாக
- சர்மிளா கண்மணியாக
- மா. நா. நம்பியார்
- ஸ்ரீவித்யா
- சத்தியப்பிரியா
- சனகராஜ்
- பொன்னம்பலம் கண்மணியின் அண்ணனாக
- மான்யா
இசை
படத்திற்கான பின்னணி சை மற்றும் பாடல்களுக்கான இசையை தேவா மேற்கொட்டார்.
தமிழ் பதிப்பு
பாடல் வரிகளை காளிதாசன் மற்றும் ரவி பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.[2]
தெலுங்கு பதிப்பு
இந்த படம் தெலுங்கில் அல்லரி புல்லோடு என பெயரில் வெளியானது.[3] அனைத்து பாடல்களையும் ராஜாஷ்ரி எழுதினார்.[4]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads