குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உலகப் பன்னோக்கு என்னும் பெயரில் செய்திகளைத் தொகுத்துக் கூறுவது குவலயானந்தம் (குவலயம்+அனந்தம்)

குவலயானந்தம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று வாதவூரார் என்பவரால் இயற்றப்பட்டது. மற்றொன்று அப்பைய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது.

மீமாம்சை என்னும் நூல் வடமொழியில் உள்ளது. இது அணியிலக்கணம் கூறும் நூல். இந்த நூலைத் தமிழில் தரும்படி வரகுண பாண்டியன் என்பவன் வேண்டினானாம். அவன் வேண்டுகோளுக்கு இணங்க வாதவூரான் என்பவர் இந்த நூலைச் செய்தளித்தாராம். இப்படி இந்த நூலின் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கிறது.

இந்த வாதவூரார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அல்லர். பிரபந்தங்கள் தோன்றிய 13ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.

முற்றுப்பெறாத இந்த நூலில் 282 நூற்பாக்கள் உள்ளன. இவற்றில் சொல்லிலக்கணமும், அணியிலக்கணமும் கூறப்படுகின்றன.

Remove ads

கருவிநூல்

தமிழ் இலக்கண நூல்கள், ச.வே.சுப்பிரமணியன் தெகுப்பு, 2007
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads