கோபிநாத் முண்டே

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde, 12 திசம்பர் 1949 - 3 சூன் 2014[1]) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். மே 26, 2014 அன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்.மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராட்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999இல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[2] 2009ஆம் ஆண்டு 15ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் பா.ஜ.கவின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் கோபிநாத் முண்டே, ஊரக வளர்ச்சி அமைச்சர் ...
Remove ads

இறப்பு

2014ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்துக்காரணமாக புதுடெல்லியில் காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[3]

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads