சங்ககால உடல்வித்தை விளையாட்டுகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உடல்வித்தை விளையாட்டுகள் பல.

கயிறூர் பாணி

கயிற்றில் ஏறி ஆடும் ஆட்டத்தைச் சங்கப்பாடல் கயிறு ஊர் பாணி எனக் குறிப்பிடுகிறது.

வியலூர் விழாவில் இது நடைபெற்றது.
மயில் ஒன்று மாம்பழத்தை உண்ணும்போது அது சுனையில் உதிர்ந்துவிட்டதாம். அந்தச் சுனைக்கு இறங்கிய மயில் அந்த நீரைப் பருகிற்றாம். அந்த நீரில் பழுத்த மிளகு, பலா ஆகியனவும் விழுந்து ஊறிக் கள்ளாக ஊறிக் கிடந்ததாம். எனவே மயில் தள்ளாடித் தள்ளாடி நடந்ததாம். இது இன்னிசை முழக்கத்துடன் ஆடுமகள் கயிற்றில் ஏறி, வியலூர் விழாவில், ஆடுவது போல இருந்ததாம். [1] [2]

Remove ads

சென்னியர் ஆடல்

வையை ஆற்றில் நீராடிய மகளிர் இசைக் கருவிகள் முழங்க ஒருவர் தலைமேல் ஒருவராக நின்று வித்தைக் காட்டி விளையாடியிருக்கிறார்கள்.[3]

வெறியுறு நுடக்கம்

சேரநாட்டில் விளையாட்டுக் காட்டிய மகளிர் பனந்தோப்பில் பலவகையாக நடந்து காட்டியும், உடம்பை வளைத்து ஒசிந்து காட்டியும், வளைந்தாடியும் பலவகையாக வேடிக்கை காட்டியிருக்கிறார்கள். [4]

விசும்பமர் ஆடல்

மதுரையில் திருமண வீடு ஒன்றில் கொண்டிமகளிர் விளக்கொளியில் விளையாட்டுக் காட்டினர். விளக்கொளி படாத இருளில் அவர்களின் கால்கள் இருந்ததால் அவர்களது ஆட்டம் விசும்பில் ஆடுவதுப் போல இருந்தது. [5]

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads