சண்டோலி தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சண்டோலி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Chandoli National Park (இந்தி: चांदोली राष्ट्रीय उद्यान)[1] இந்தியாவின் மகாராஸ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்காவானது 2004 ஆம் ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்டது.[2] இது 317.67 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தியதி முதல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுலில் உள்ளது. தற்போது இங்கே 9 புலிகளும் 66 சிறுத்தைகளும் உள்ளன.இந்தப் பூங்காவானது சண்டோலி அணைக்கட்டின் அருகில் உள்ளது. இதன் அமைவிடம் 73°40' & 73°53' E மற்றும் 17°03' & 17°20'N ஆகும். இங்கு 23 வகையான பாலூட்டி இனங்கள், 122 வகையான பறவை இனங்கள், 20 வகையான ஊர்வன இனங்கள் உள்ளன. வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, அணில்கள், கரடிகள்,காட்டெருது போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads