சண்முகப்பிரியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56 ஆவது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 ஆவது இராகமாக விளங்குகிறது.[1][2]
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம2 க2 ரி2 ஸ |
- திசி என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தில் 2 ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
சிறப்பு அம்சங்கள்
- பக்திச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- 20 ஆவது மேளமாகிய நடபைரவியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, ப, த கிரக பேதத்தின் வழியாக முறையே சூலினி (35), தேனுகா (09), சித்ராம்பரி (66) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
உருப்படிகள்
- கிருதி : வத்தனே வாரு : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : சித்தி விநாயகம் : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : அரகர சிவ : ஆதி : முத்துத் தாண்டவர்.
- கிருதி : சுகமே சுகம் : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : பார்வதி நாயகனே : ஆதி : பாபநாசம் சிவன்.
ஜன்ய இராகங்கள்
சண்முகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
திரையிசைப் பாடல்கள்
சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா - திருவிளையாடல்[3]
- மறைந்திருந்து பார்க்கும் - தில்லானா மோகனாம்பாள்
- சொல்லாயோ வாய் திறந்து - மோகமுள்
- கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads