சந்தீப் சிங்
இந்தியாவின் வளைதடிப் பந்தாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தீப் சிங் (Sandeep Singh) (பிறப்பு: 27 பிப்ரவரி 1986) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2] இவர் குழுவில் முழுபிற்காப்பளராகவும் இழுத்துப் பிடிப்பில் மூலைத் தண்டவகைச் சிறப்பு வல்லுனராகவும் விளங்குகிறார். இவர் அரியானா காவல்துறையில் இணைகண்காணிப்பாளராக உள்ளார்.[3]
Remove ads
இளமை
இவர் அரியானா மாநில, குருசேத்திரம் மாவட்டத்தில் சாகாபாது பேரூரில் குர்சரண் சிங் சைனிக்கும் தல்ஜித் கௌர் சைனிக்கும் பிறந்தார். இவரது அண்ணன் பிக்ரமஜீத் ச்ங்கும் ஓர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். பின்னவர் இந்திய எண்ணெய் நிறுவனம் சார்பில் விளையாடுகிறார்.[4][5]
சாதனைகள்
- இவர் 2009 சுல்தான் அசுலான் சா கோப்பைப் போட்டியில் அப்போட்டியின் சிறந்தவராக அனைத்து இலக்குகளையும் வென்றார்.
- இவர் 16 இலக்குகள் எடுத்து இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தேர்வு பெற்ற முன்னணி ஆடவர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[6]
விருதுகள்
- 2010: அருச்சுனா விருது வளைதடிபந்தாட்டச் சாதனைக்காகப் பெற்றவர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads