சந்தௌசி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தௌசி (Chandausi), வட இந்தியாவில் அமைந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தின் நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான சம்பல் நகரத்திலிருந்து தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும்மொராதாபாத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; லக்னோவிற்கு வடமேற்கில் 362 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 20,726 வீடுகளும் கொண்ட சந்தௌசி நகரத்தின் மக்கள் தொகை 1,14,383 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14,595 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 71% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,493 மற்றும் 16 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 73.49%, இசுலாமியர் 25.71%, சீக்கியர்கள் 0.38%, கிறித்தவர்கள் 0.16% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.[1]
Remove ads
போக்குவரத்து
இரயில் நிலையம்
அலிகர்-பரேலி மற்றும் லக்னோ-மொராதாபாத்தை இணைக்கும் இருப்புப் பாதையில் சந்தௌசி இரயில் நிலையம் உள்ளது.[2]
தட்ப வெப்பம்
- கோடைக்கால வெப்பம்: 45.0 °C (அதிகபட்சம்), 32.5 °C (குறைந்தபட்சம்)
- குளிர்கால வெப்பம்: 28.5 °C (அதிகபட்சம்), 1 °C (குறைந்தபட்சம்)
- ஆண்டின் சராசரி மழைப் பொழிவு: 1143 மில்லி மீட்டர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads