சந்த் சமஸ்தானம்

From Wikipedia, the free encyclopedia

சந்த் சமஸ்தானம்
Remove ads

சந்த் சமஸ்தானம் அல்லது சந்திரம்பூர் சமஸ்தானம் (Santrampur State or Sant State)[1] and Soanth[2])1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். சந்த் சமஸ்தானத்தின் தலைநகரம் சந்திரம்பூர் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தின் சந்திரம்பூர் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் சந்த் சமஸ்தானம் குஜராத் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சந்த் சமஸ்தானம், தலைநகரம் ...
Thumb
சந்த் சமஸ்தான மன்னர் ஜோரவேர் சிங், ஆண்டு 1922
Remove ads

வரலாறு

ராணா பதான் சிங் சந்த் இராச்சியத்தை நிறுவினார். [3][4][5][1]பின்னர் மராத்தியப் பேரரசில் சந்த் சமஸ்தானம் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சந்த் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் இருந்தது. சந்த் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சந்த் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1960 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சந்த் சமஸ்தானம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads