சர்வ மித்ரா சிக்ரி

From Wikipedia, the free encyclopedia

சர்வ மித்ரா சிக்ரி
Remove ads

சர்வ மித்ரா சிக்ரி (Sarv Mittra Sikri) (26 ஏப்ரல் 1908 24 செப்டம்பர் 1992) என்பவர் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் 13வது தலைமை நீதிபதியாக 22 ஜனவரி 1971 முதல் 25 ஏப்ரல் 1973 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றியவர் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் சர்வ மித்ரா சிக்ரி, 13ஆவது இந்தியத் தலைமை நீதிபதி ...

இவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 1930-ல் தனது பணியினைத் தொடங்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் 1949-ல் பஞ்சாபின் உதவி அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1951 முதல் 1964 வரை அரசு தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பிப்ரவரி 1964-ல், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் சனவரி 1971-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியானார். வழக்கறிஞர் பதவியிலிருந்து நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் முதல் நீதிபதியும், இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியும் இவரே ஆவார்.

கேசவாநந்த பாரதிக்கும் கேரள மாநிலத்திற்குமான வழக்கில் இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டைக் கோடிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் இவர் ஆவார்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads