சல்லிய பருவம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சல்லிய பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் ஒன்பதாவது பருவம் ஆகும். கர்ணன் போரில் இறந்த பின்னர் சல்லியன் படைத் தலைமைப் பொறுப்பு ஏற்றுப் போரிட்ட காலப் பகுதியின் நிகழ்வுகளை இப்பருவம் விளக்குகின்றது. சல்லியன் ஒரு நாள் மட்டுமே படைத் தலைமைப் பொறுப்பில் இருந்து அன்றே தருமரின் கையால் மடிகிறான். இதனால் இப்பருவம் இறுதி நாளான ஒரு நாட் போர் நிகழ்வுகளை மட்டுமே விபரிக்கிறது. சகுனியும் இதே நாளில் சகாதேவனுடன் போரிட்டு இறக்கிறான். பெரும்பாலானோர் இறந்து மிகச் சிலரே எஞ்சியிருந்த நிலையில், துரியோதனன் ஏரியொன்றுக்குட் சென்று மறைந்து கொள்கிறான். வீமன் அப்பகுதிக்குச் சென்று துரியோதனனை இழிவாகப் பேசி அவனை வெளியே வரவைத்து அவனுடன் கதாயுதப் போர் செய்கிறான். கண்ணனின் தூண்டுதலால், போர் முறைக்கு மாறாக, வீமன் துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொல்கிறான்.[1]

இப்பருவத்தில் 59 பிரிவுகளில் 3220 பாடல்கள் உள்ளன.

Remove ads

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads