சிம்மேந்திரமத்திமம்
மேளகர்தாவின் ௫௭-ஆவது ராகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிம்மேந்திரமத்திமம் கருநாடக இசையின் 57ஆவது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் ஜன்யமான (வழி இராகமாகிய) ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57ஆவது இராகமாக விளங்குகிறது.[1]
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம2 க2 ரி2 ஸ |
- "திசி" என்றழைக்கப்படும் 10ஆவது சக்கரத்தில் 3ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
சிறப்பு அம்சங்கள்
- கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது.
- 21வது மேளமாகிய கீரவாணியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம, தைவத மூர்ச்சனைகள் முறையே மாயாமாளவகௌளை (15), ரசிகப்பிரியா (72) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
- ஐரோப்பிய ஹங்கேரி நாட்டின் இசையிலும், நாடோடி இனத்தாரின் இசையிலும் இந்த இராகம் ஒலிக்கிறது.
உருப்படிகள்
- கிருதி : அசைந்தாடும் மயில் ஒன்று : ஆதி : ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
- கிருதி : நீதுசரணமுலே : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : காமாட்சி : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : இன்னம் ஒரு தலம் : ரூபகம் : முத்துத் தாண்டவர்.
- கிருதி : உன்னையல்லால் : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- திருப்புகழ் : இரவு பகல் : திஸ்ர ஜம்பை : அருணகிரிநாதர்.
ஜன்ய இராகங்கள்
சிம்மேந்திரமத்திமத்தின் ஜன்ய இராகங்கள் இவை.
திரை இசைப் பாடல்கள்
- "எல்லாம் இன்ப மயம்" (மணமகள்)
- "ஆடாத மனமும் உண்டோ" (மன்னாதி மன்னன்)
- "ஆனந்த ராகம்" (பன்னீர் புஷ்பங்கள்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads