சிவந்தி ஆதித்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவந்தி ஆதித்தன் (Sivanthi Adithan) (செப்டம்பர் 24, 1936 - ஏப்ரல் 19, 2013) தமிழ்ச் செய்தி நாளேடுகள் தினத்தந்தி, மாலைமலரின் உரிமையாளராகவும், முதன்மைத் தொகுப்பாசிரியராகவும் இருந்தவர்[1]. தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் - கோவிந்தம்மாள் இணையரின் இரண்டாவது மகன் ஆவார். கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்தியக் கைப்பந்து விளையாட்டுச் சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.[2]
2008ஆம் ஆண்டில் இலக்கியம்/கல்விப் பிரிவில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது[3].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads