சிவபெருமான் மும்மணிக்கோவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவபெருமான் மும்மணிக்கோவை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை.
அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக மாறி மாறி வருமாறு அடுக்கப்பட்டுள்ள 30 பாடல்களைக் கொண்டது இந்த நூல்.
இதன் ஆசிரியர் இளம்பெருமானடிகள்; காலம் 8ஆம் நூற்றாண்டு.
பாடல்
- அகவல் பாடல் 4
- சடையே, நீரகம் ததும்பி நெருப்பு கலிக்கும்மே
- மிடறே. நஞ்சகம் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
- வடிவே, முளிஎரி கவைஇத் தளிர் தயங்கும்மே
- அடியே, மடங்கல் மதம் சீறி மலர் பழிக்கும்மே
- அஃதான்று, இனைய என்று அறிகிலம் யாமே, முனைதவத்
- தலைமூன்று வகுத்த தனித்தாள்
- கொலையூன்று குடுமி நெடுவேலோயே[1]
- வெண்பா பாடல் 8
- உடைதலையின் கோவை ஒருவடமோ, கொங்கை
- புடைமலிந்த வெள்ளேருக்கம் போதோ, - சடைமுடிமேல்
- முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ[2] முக்கண்ணான்
- இன்னநாள் கட்ட(து) இவள்.[3]
- கட்டளைக்கலித்துறை பாடல் 24
- தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
- ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிக்(கு)எற் றேஇவன்ஓர்
- பேரிளங் கொங்கைப் பிணவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
- ஓரிளந் துண்டம் சுமந்தையம் வேண்டி உழிதருமே. [4]
Remove ads
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads