சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது.[1]
Remove ads
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் வட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் சீயாத்தமங்கை ஊரில் முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.[2] இந்த ஊர் திருநீலநக்க நாயனாரும் அவரது மனைவி மங்கையற்கரசியும் பிறந்த ஊர் எனப்படுகிறது.
கோயில் அமைப்பு
இக்கோயிலானது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்காறார். இங்கு சிவபெருமானுக்கு ஐந்து நிலை கோபுரமும், அம்மைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளன. கோயிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையற்கரசி ஆகியோரின் சிலைகள் உள்ளன. மறுமுரம் சமயக் குரவர்களின் சிலைகள் காணப்படுகின்றன. மூலவரைக் காணச் செல்லும் முன்பு விநாயகர், தண்டாயுதபாணி ஆகியோரைக் காண இயலும். மேலும் இங்கு அர்த்தநாரீசுவரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மா, இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.[2]
தனிச் சிற்றாலயத்தில் கொண்டிருக்கும் இருமலர்க்கண்ணி அம்மன் சிற்றாலயத்தில் நுழைந்தால் விநாயகர், முருகன், நந்தி, பைவர், சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.[2]
Remove ads
சிறப்புகள்
- பிரம்ம தேவர் வழிபட்ட திருத்தலம்
- திருநீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவியார் மங்கையர்க்கரசி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.[3]
வழிபாடு
இக்கோயிலில் நான்கு காலபூசை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திர நாளில் திருநீலநக்க நாயனாருக்கு குருபூசை விழா நடத்தப்படுகிறது. ஆவணி மூல நட்சத்திர நாளில் இங்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்க
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads