செட்டிக்குளம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செட்டிக்குளம் தொடருந்து நிலையம் (Cheddikulam railway station) இலங்கையின் வடக்கே செட்டிக்குளம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் இந்நிலையம் மன்னார் தொடருந்துப் பாதையின் ஒரு அங்கமாக மன்னார் தீவையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கிறது. ஈழப் போர்க் காலத்தில் 1990 முதல் 2013 வரை இயங்காமல் இருந்து வந்த இந்நிலையம், 2013 மே 14 இல் மதவாச்சி முதல் மடு வீதி வரையான பாதை புனரமைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் திறக்கப்பட்டது.[1][2] 2015 மார்ச் 14 முதல் தலைமன்னார் வரை சேவைகள் நடைபெறுகின்றன.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads