சேடபட்டி இரா. முத்தையா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேடபட்டி இரா. முத்தையா (Sedapatti R. Muthiah) (4 அக்டோபர் 1945 – 21 செப்டம்பர் 2022) தி.மு.கவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 1991[2] முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர்.[3][4]. 2000 வரை அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார். அதிமுக சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாச்பாய் தலைமையேற்ற நடுவண் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் சேடபட்டி இரா. முத்தையா, சட்டப்பேரவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads