சேந்தநாடு திரௌபதியம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேந்தநாடு திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தநாடு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] இங்கு மூலவராக திரௌபதி அம்மனும் மற்றும் விநாயகர் முருகர் சன்னதி உள்ளது. காவல் தெய்வமாக முத்தூலுராவுத்தர் உள்ளார். இத்திருத்தலத்தில் ஆண்டுகள்தோறும் ஆனி மாதத்தில் உற்சவ சேவை நடைபெறும். சிறப்பு உற்சவமாக தேரோட்டமும் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.
Remove ads
வரலாறு
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் திரௌபதியம்மன் சன்னதியும், விநாயகர், முருகர், முத்தாலுராவுத்தர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads