சோகாமேளர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோகாமேளர் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
கொத்தமங்கலம் சீனு (வி. எஸ். சிறிநிவாசன்) சோகாமேளராகப் பாடி நடித்திருந்தார். ஜி. சுந்தர பாகவதர் (இசையமைப்பாளர் ஜி. ராமநாதனின் சகோதரர்) திரைக்கதை, மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். அவரே இசையமைத்தும் இருந்தார்.
Remove ads
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோகாமேளர் (கொத்தமங்கலம் சீனு) பண்டரிபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குள் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பழமைவாதிகளான பிராமணர்கள் (எம். ஆர். ராதா) அவரை உளரீதியாகப் பலவிதத்திலும் துன்புறுத்தினர். ஆனாலும், சோகாமேளரின் கடும் வழிபாட்டினால் இறைவன் பாண்டுரங்க விட்டலர் அவர் முன் தோன்றினார். அத்துடன் அவரின் குடிசைக்கு நாள்தோறும் சென்று சோகாமேளர் பரிமாறிய உணவையும் உண்டார். இதனையறிந்த பழமைவாதிகள் சோகாமேளரைத் தாக்கினர். ஆனாலும் விட்டலர் கோயிலில் சில அதிசயங்கள் நிகழ்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தனர். சோகாமேளர் தாக்குதலுக்குள்ளக்கப்பட்ட அதே நாளில் சோகாமேளருக்கு ஏற்பட்டிருந்த உடற்காயம் போன்ற அதே காயம் கோயிலில் இருந்த சிலையிலும் ஏற்பட்டிருந்தது. தமது மடமையை உணர்ந்த கோயில் பூசாரிகளான அந்தணர்கள் சோகாமேளரிடம் மன்னிப்புக் கேட்டு, விட்டலர் கோயிலினுள் அவரை நுழைய அனுமதித்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads