சௌந்தர்யன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌந்தர்யன் (Soundaryan) என்பவர் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் சேரன் பாண்டியன் (1991) திரைப்படத்தில் அறிமுகமானார். சிந்துநதிப் பூ (1994) திரைப்படம் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.[1]
திரைப்பயணம்
சௌந்தர்யன் தனது திரைப் பயணத்தை கே. எஸ். ரவிக்குமாரின் இரண்டு படங்களான சேரன் பாண்டியன் (1991) மற்றும் புத்தம் புது பயணம் (1991) ஆகியவற்றுடன் தொடங்கினார். பின்னர் 1990களில் கிராமத்துப் பின்னணியைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்தார். ‘’கோபுர தீபம்’’ (1997) மற்றும் ‘’சேரன் சோழன் பாண்டியன்’’ (1998) ஆகிய படங்களில் இவரது பணியானது பாராட்டப்பட்டது.
2000கள் மற்றும் 2010கள் முழுவதும் திரைப்பட இசையமைப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தார். ‘’நதிகள் நனைவதில்லை’’ (2014) மற்றும் ‘’நனையாத மழையே’’ (2016) ஆகிய படங்களில் பணியாற்றினார்.[2][3][4]
Remove ads
படங்களின் பட்டியல்
- சேரன் பாண்டியன் (1991)
- புத்தம் புது பயணம் (1991)
- முதல் சீதனம் (1992)
- சிந்துநதிப் பூ (1994)
- முத்து குளிக்க வாரியளா (1995)
- மாமனிதன் (1995)
- அந்த நாள் (1996)
- டேக் இட் ஈசி ஊர்வசி (1996)
- கோபுர தீபம் (1997)
- கண்டக்டர் மாப்பிள்ளை (1997)
- பொன்மானை தேடி (1998)
- சேரன் சோழன் பாண்டியன் (1998)
- நெருப்பு (2001)
- அன்புத் தொல்லை (2003)
- கலாட்டா கணபதி (2003)
- காதலே ஜெயம் (2004)
- முதல் ஆசை (2005)
- வீரண்ணா (2005)
- மலரினும் மெல்லிய (2008)
- நதிகள் நனைவதில்லை (2014)
- நனையாத மழையே (2016)
- புதிய புரூஸ் லீ (2018)
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads