ஜோராசங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோராசங்கோ (Jorasanko) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாவட்டத்தில் உள்ள வட கொல்கத்தாவின் அருகாமைப் பகுதியாகும். இந்த இடத்தில் இருக்கும் ஒரு சிறிய நீரோடையின் மேல் அமைந்திருக்கும் பரவிய இரண்டு ( 'ஜோரா ) மர அல்லது மூங்கில் பாலங்கள் (சங்கா) காரணமாக இது ஜோராசங்கா என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
வரலாறு
பாரம்பரியமாக ஜோராசங்கோ தாகூர் மாளிகை என்று அழைக்கப்படும் தாகூர் குடும்பத்தின் புகழ்பெற்ற குடியிருப்பைத் தவிர, இது சின்கர்கள் (காளிபிரசன்னா சின்கா உட்பட), பால்கள் ( கிருட்டிணதாசு பால் உட்பட), திவான் பனராசி கோசு, கோகுல் சந்திர தேவ் நரசிங்க சந்திர தேவ், பிரபுல்லா சந்திர ஜெயின் மற்றும் சந்திரமோகன் சட்டர்ஜி ஆகியோரின் குடும்பங்களாகவும் இருந்தது. "இப்பகுதி வங்காள மறுமலர்ச்சியின் தொட்டிலாக மாறியது." [1] இது முன்னர் மெச்சுவாபசார் என்று அழைக்கப்பட்டது. [2]

கொல்கத்தாவில் உள்ள காவல் நிலையங்களின் ஆரம்ப பட்டியல் 1785 ஆம் ஆண்டில் காவல் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்காக தயாரிக்கப்பட்டது. அப்போது பதிவு செய்யப்பட்ட 31 காவல் நிலையங்களில் ஜோராசங்கோவும் ஒன்றாகும். [3]
ஜோராசங்கோவில் உள்ள நிறுவனங்களில் - ஆதி பிரம்ம சமாஜம், ஜோராசங்கோ பாரதி நாட்டிய சமாஜம், காளிகதை ஹரிபக்தி பிரதான சபை, மினெர்வா நூலகம் மற்றும் ஓரியண்டல் பள்ளி ஆகியவியும் அடங்கும் . [4] ஓரியண்டல் பள்ளி 1829 ஆம் ஆண்டில் கல்வியாளர் கௌர் மோகன் ஆடி என்பவரால் தொடங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் இந்து பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டுமே திறந்திருந்தது . [5]
கொல்கத்தாவின் மூன்றாவது பல்கலைக்கழகமான இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் 1962 ஆம் ஆண்டில் ஜோராசங்கோவில் உள்ள தாகூர் குடும்ப வீட்டில் அமைக்கப்பட்டது. இது முதன்மையாக இசை மற்றும் நுண்கலைகளுக்கான மையமாக இருந்தது. ஆனால் பின்னர் கலை மற்றும் மனிதநேயம் வரை நீட்டிக்கப்பட்டது. [6]
1888 ஆம் ஆண்டில், புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட 25 காவல் நிலையங்களில் ஒன்று ஜோராசங்கோவில் அமைந்தது. [7]
Remove ads
ஜோரசங்கோ நாட்டியாசாலை
இரண்டு ஜோராசங்கோ நாட்டியாசாலைகள் இருந்தன. முந்தையதை ஜோராசங்கோவில் பியாரி மோகன் போசு, பனராசி கோசு தெருவில் உள்ள தனது வீட்டில் நாட்டியாசாலையை தொடங்கினார். இதில்1854 மே 3, அன்று சேக்சுபியரின் ஜூலியஸ் சீசர் மட்டுமே அரங்கேற்றப்பட்டது. [8]
கனேந்திரநாத் தாகூர் 1865ஆம் ஆண்டில் இரண்டாவது ஜோராசங்கோ நாட்டியசாலையை நிறுவி, அந்த ஆண்டிலேயே மைக்கேல் மதுசூதன் தத்தா எழுதிய கிருட்டிணகுமாரி என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அகல்யாதேவி வேடத்தில் இளம் ஜோதிரிந்திரநாத்துக்கு நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்தது. [9] முதலில் ஆண்கள் பெண்கள் வேடங்களில் நடித்தனர். ஆனால் பின்னர் குடும்பத்தின் பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்பாகவும், பொதுமக்களுக்கு முன்பாகவும் நடிக்க ஆரம்பித்தனர். [10]
வங்காள மொழியில் சில நல்ல நாடகங்கள் இருந்ததால், அவற்றை அரங்கேற்றுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. கனேந்திரநாத் நாடகங்களை எழுதுவதற்கான பரிசை அறிவித்தார். இராம்நாராயண் தர்கரத்னா என்ற நாடக ஆசிரியர் எழுதிய நபநாதக் முதல் பரிசை வென்றது. இதற்காக ரூபாய் இருநூறும் (அந்த நாட்களில் ஒரு பெரிய தொகை) மற்றும் நாடகம் ஆயிரம் பிரதிகள் அச்சிடும் செலவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [11] [12]
Remove ads
சமீபத்திய முன்னேற்றங்கள்
தாகூரின் வீட்டின் வரலாற்றை கலைரீதியாக வெளிப்படுத்தியதற்காக 'ஜோராசங்கோ தாகூர்பாரி' என்ற படத்திற்காக 2001 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்கத்திற்கான விருதை புத்ததேவ் தாசுகுப்தா வென்றார். [13] பர்கட்டன் பேல்ஸ் ஆப் கல்கத்தா என்ற ஒரு புத்தகத்தை எழுதிய ஜோன் டெய்லர், ஜோராசங்கோ தாகூர் மாளிகையால் பௌரவிக்கப்பட்டார். "இந்த கட்டமைப்புகள் கொல்கத்தாவின் வரலாற்றின் துணிவாக அமைகின்றன," என்று இவர் கூறுகிறார். [14]
ஜோராசங்கோ கொல்கத்தாவில் ஷெல் தொழிலின் ஒரு முக்கிய மையமாகும். [15] இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் தொழில் நல்ல நிலையில் இல்லை. [16]
நிலவியல்
காவல் மாவட்டம்
ஜோராசங்கோ காவல் நிலையம் கொல்கத்தா காவல்துறையின் மத்திய பிரிவின் ஒரு பகுதியாகும். இது 16, பால் முகுந்த் மல்கர் சாலை, கொல்கத்தா -700007 என்ற முகவரியில் அமைந்துள்ளது. [17]
தல்தாலா மகளிர் காவல் நிலையம் மத்திய பிரிவின் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் மாவட்டங்களையும் உள்ளடக்கியது போபஜார், புர்ராபஜார், கிரிஷ் பார்க், ஹரே ஸ்ட்ரீட், ஜோராசங்கோ, முச்சிபாரா, புதிய சந்தை, டால்தலா மற்றும் போஸ்டா. [17]
Remove ads
கேலரி
- சுவரொட்டிகள் ஜாத்ரா குழுக்களின் அலுவலகங்களை அலங்கரிக்கின்றன
- ஓரியண்டல் பள்ளி
- ஜோராசங்கோ நடைபாதையில் கரும்பு விற்பனைக்கு உள்ளது
- ஜோராசங்கோவிலுள்ள ஒரு அச்சுக்கூடம்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads