டி. என். சிவஞானம் பிள்ளை

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

டி. என். சிவஞானம் பிள்ளை
Remove ads

திவான் பகதூர் சர் திருநெல்வேலி நெல்லையப்ப சிவஞானம் பிள்ளை ( டி. என். சிவஞானம் பிள்ளை, ஏப்ரல் 1, 1861 – 13 சூன் 1936)[1] ஒரு தமிழக அரசியல்வாதி, அரசு நிருவாகி மற்றும் வழக்கறிஞர். நீதிக்கட்சியை சேர்ந்த இவர் பனகல் அரசரின் இரண்டாவது அமைச்சரவையில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் சர்தின்னவேலி நெல்லியப்ப சிவஞானம் பிள்ளைTinnevely Nelliappa Sivagnanam Pillai, வளர்ச்சித் துறை அமைச்சர் (சென்னை மாகாணம்) ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சைவ வேளாள சாதியினைச் சேர்ந்த சிவஞானம் பிள்ளை, சென்னை கிருத்துவக் கல்லூரியில் படித்து 1882ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் குடியியல் பணித்துறைக்கு (இந்தியன் சிவில் செர்விஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டு துணை ஆட்சியராக சிறிது காலம் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நீதிக்கட்சியில் இணைந்தார். 1919ல் திருநெல்வேலித் தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923-26 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[2][3][4][5]

Remove ads

பிற பணிகள்

சிவஞானம் பிள்ளை திருநெல்வேலி தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத் தலைவராகவும், திருநெல்வேலி நாட்டாண்மைக் கழக முதல் தலைவராகவும், சென்னை மாகாண வளர்நெறி அமைச்சராகவும், இருந்து பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads