டொமினிக் ஜீவா

From Wikipedia, the free encyclopedia

டொமினிக் ஜீவா
Remove ads

டொமினிக் ஜீவா (Dominic Jeeva, 27 சூன் 1927 – 28 சனவரி 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வந்தார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]

விரைவான உண்மைகள் டொமினிக் ஜீவா, பிறப்பு ...
Remove ads

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • தண்ணீரும் கண்ணீரும் (1960)[5]
  • பாதுகை (1962)[6]
  • சாலையின் திருப்பம் (1967)[7]
  • வாழ்வின் தரிசனங்கள் (2010)[8]
  • டொமினிக் ஜீவா சிறுகதைகள்[9]

கட்டுரைத் தொகுப்புகள்

  • அனுபவ முத்திரைகள்[10]
  • எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்[11]
  • அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்[11]
  • நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்[12]
  • முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்[13]

மொழிபெயர்ப்பு நூல்

  • UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)[14]
Remove ads

ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்

விருதுகள்

  • 2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)
  • 2007: சங்கச் சான்றோர் விருது ( இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.)

மறைவு

டொமினிக் ஜீவா 2021 சனவரி 28 மாலை தனது 93-வது அகவையில் கொழும்பில் காலமானார்.[15] இறந்த பின்னர் இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவரது உடல் 2021 ஜனவரி 30 சனிக்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இறுதிக்கிரியைகள் நடத்தப்படாமல் கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.[16]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads